சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றிக்கொடி நாட்டி கைவசம் ஏராளமான படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, சமூக விஷயங்களுக்காக குரல் கொடுப்பார், அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளிப்பார்.
இந்நிலையில், ப்ரியா வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
சிவப்பு கருப்பு நிற சேலை உடுத்தியுள்ள ப்ரியா, கருப்பு-வெள்ளை காலம் ஓடிவிட்டது, வாழ்க்கையில் சில வர்ணங்களைச் சேர்க்க வேண்டிய நேரம் இது; கருப்பை விட சிறந்த நிறம் எது எது என்று பதிவு செய்துள்ளார்.
ப்ரியா பவானி சங்கரின் இந்த பதிவு தற்போது விவாத பொருளாகியுள்ளது. நெட்டிசன்கள் இதுஏதோ குறியீடு என்று கூறிவருகின்றனர்.
முன்னதாக, ப்ரியா ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் கயிற்றில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்து,
அந்த புகைப்படங்களுக்கு ’ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன்’ என்று தன்னைத்தானே கலாய்த்து பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.