மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசிற்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பதிவுகள் ட்விட்டரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் விவசாய போராட்டம் தொடர்பாக அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் ட்விட்டரில் அதிகம் பரவி வருகின்றன. விவசாயிகளை அரசு படுகொலை செய்கிறது போன்ற பதிவுகள் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றனர்.
அதனால் மத்திய அரசின் மீது அவதூறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. எனவே இது போன்று 250 பதிவுகளையும் அது சம்பந்தமான கணக்குகளையும் உடனே நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை ட்விட்டர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனை கண்டுகொள்ளாத ட்விட்டேர் நிறுவனத்தை தற்போது மத்திய அரசு அவதூறு பதிவுகளை நீக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் படும் என்று எச்சரித்துள்ளது.