மும்பை:-
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (77) மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு (44) கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு லேசாக அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமிதாப் தனது டிவிட்டர் பதிவில்:-
எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் முடிவு வரவில்லை.
என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகிய அனைவரும் கொரோனா சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
அபிஷேக் பச்சனின் ட்விட்டரில் பதிவில்:-
என் தந்தைக்கும் எனக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து அதிகாரிகளுக்கும் எங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளோம். மேலும் என் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும், பதற்றம் அடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.