சினிமா

நான் இறந்தால் தான் அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுப்பீர்களா : பிரபல பாலிவுட் நடிகை குற்றசாட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலிவுட் நடிகை பாயல் கோஸஷ்  இயக்குனர் அனுராக் காஷ்யப்  தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு  ஆதரவாக அவரின் முன்னாள் மனைவிகளும் மற்றும் திரைத்துறை துறையினரும் குரல் கொடுத்து வந்தனர்.

இருந்தபோதும் பாயல் கோஷ்  தனது நிலையில் உறுதியாக இருந்து  இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்து வந்தார். மேலும் தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை பாயல் கோஷ்  சந்தித்துப்பேசினார். அதனையடுத்து சுஷாந்த் சிங் மரணம், பாலிவுட் போதைபொருள் விவரங்களுக்கு பிறகு இந்த குற்றச்சாட்டு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

கடந்த சில நாட்களாக இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த பாயல்  கோஷ் தற்போது மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.  இதுகுறித்து பதிவிட்டுள்ள, “பாயல் கோஷ் நான்கு மாதங்கள் கடந்துவிட்டன, ஆதாரங்களை நான் சமர்ப்பித்த போதிலும் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நான் இறந்தால் தான் அனைத்தும் விரைவாக நடக்குமா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ALSO READ  மூன்றாவது முறையாக இணையும் "கீதா கோவிந்தம்" ஜோடி !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘அந்தகன்’ பட டைட்டில் போஸ்டர் வெளியீடு..!

News Editor

மேன் vs வைல்டில் பியர் கிரில்ஸுடன் பங்கேற்றுள்ள ரஜினிக்கு காயம்

Admin

பிறந்தநாள் விழாவில் விஜய் பட நடிகைக்கு அசத்தலாக ப்ரபோஸ் செய்த இளைஞன் :

naveen santhakumar