சினிமா

நடிகர் விஷாலுக்கு எச்சரிக்கை விடுக்கும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘சக்ரா’ திரைப்படத்தை தயாரிப்பதாக நடிகர் விஷால், ஆர்.பி.சவுத்ரியிடம் பணம் பெற்று இருந்தார். அதற்கு பிணையாக சில ஆவணங்களையும் கொடுத்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பணம் கொடுத்த பின்பும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அந்த ஆவணங்களை திருப்பி தர மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ஆர்.பி.சவுத்ரி, அந்த ஆவணங்களை கொடுத்து வைத்திருந்த அவரது மேலாளர் சிவக்குமார் மறைந்து விட்டதாகவும், நடிகர் விஷால் முன்னெச்சரிக்கையாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம் என்றாலும் அதற்கு முன்பு தன்னிடம் ஒருமுறை ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். இதுநாள் வரையிலான தன்னுடைய திரை அனுபவத்தில், பணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் ஆர்.பி.சவுத்ரி அப்போது குறிப்பிட்டுள்ளார்.

விஷாலின் ஆவணங்களை சிவக்குமார் வேறு யாரிடமாவது கொடுத்து வைத்திருந்தால், அதனை உடனடியாக திருப்பி கொடுக்குமாறும், அதனை பயன்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Share
ALSO READ  பிச்சைக்காரன்-2 படத்தில் சிறிய மாற்றம் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தன்னை பற்றி வதந்திகள் பரவுவதாக தங்கர் பச்சான் புகார் :

Shobika

பாலிவுட் நடன இயக்குநர் மரணம்!… 

naveen santhakumar

வயிற்றில் சிசுவுடன் சிரசாசனம் செய்யும் அனுஷ்கா ஷர்மா…..உதவும் கணவர் கோஹ்லி…..

naveen santhakumar