சினிமா

செம்பருத்தி சீரியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் ஜனனி…..கண்ணீர் மல்க வீடியோ…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘செம்பருத்தி’. கார்த்திக் ராஜ், ஷபானா உள்ளிட்டோர் நடித்து வரும் இத்தொடரில் ‘அகிலாண்டேஸ்வரி’ கதாபாத்திரத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அகிலாண்டேஸ்வரியின் 2-வது மருமகளாக நடித்திருந்தவர் ஜனனி அசோக்குமார். இவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் தன்னுடைய நடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார். தனது பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஜனனி அசோக்குமார், நேற்று லைவ்வில் வந்து உரையாடினார்.

ALSO READ  சீரியலுக்கு டாட்டா..!!!!!!வாணிபோஜன்…..

அப்போது அழகுக்குறிப்புகள் குறித்து பேசிக் கொண்டிருந்த போது தான் நடித்து வரும் சீரியலில் இருந்து தனக்கு போன் கால் வந்ததாக தெரிவித்திருக்கும் ஜனனி, ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இனி நடிக்க மாட்டேன்.நான் சின்னத்திரையில் நடிக்க வந்து நான்கில் மூன்று ஆண்டுகளாக ‘செம்பருத்தி’ சீரியலில் நடித்து வருகிறேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்குத் தெரியும். 

இனிமேல் ஐஸ்வர்யாவாக நடிக்க இருப்பவருக்கு உங்களது ஆதரவைக் கொடுங்கள்’ என்று சொல்லிக் கொண்டே திடீரென தான் நீக்கப்பட்டதை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றும் இதை எதிர்பார்க்கவில்லை எனக் கூறியும் கதறி அழுதுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அஜித் ரசிகர்களை கைது செய்ய வாய்ப்பு : கஸ்தூரிக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவு

Admin

பார்ட்டியில் 100 பேர்..பாடகிக்கு கொரோனா..அதிரும் பாலிவுட் பிரபலங்கள்

naveen santhakumar

“இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்”;லோகேஷ் கனகராஜ் ட்வீட் !

News Editor