5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சீதா அவதாரம்’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது சீதையின் பார்வையில் ராமாயண கதை நகர்வது போன்று படமாகிறது. இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
3D தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படத்தை ‘தங்கல்’ படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். இந்தப் படத்திற்கு பாகுபலி, தலைவி படங்களுக்கு திரைக்கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார்.
கரீனா கபூர், சீதா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்பதாகவும், இதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் சீதாவாக கங்கணா ரணவத் நடிக்கிறார் என்பதை படத்தரப்பு உறுதி செய்துள்ளது.
கங்கணா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தலைவி’ அதற்கு முன்னர் வெளியான மணிகார்னிகா படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.