நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்றளவும் அனைவரும் விரும்பக்கூடிய நபராக இருந்து வருகிறார். இவர் நீண்ட காலம் நடிப்பதை கைவிட்டு திரைத்துறையில் இருந்து ஒதுங்கிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான கத்தி சண்டை படத்தின் மூலம் சினிமா துறைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதனையடுத்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்” படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தது. நடிகர் வடிவேலு மெர்சல் படத்தையடுத்து தொடர்ந்து பல படங்கள் நடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், தலைநகரம், மருதமலை, கத்தி சண்டை, உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படத்திலும் நடிங்கர் வடிவேலுவின் காமெடி அணைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் சுராஜ்-வடிவேலு கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு “நாய் சேகர்” என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான “தலைநகரம்” படத்தில் நடிகர் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் “நாய் சேகர்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இதனையடுத்து இவர்கள் கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
#vadivelU #Comedy #Padikathavan #NaaiSekar #TamilThisai #Mersal #Kaththisandai #DirectorSuraj #ThalaiNagaram #Maruthamalai #Vaikaipuyal #Vadivelu #ComedyKingVadivelu #Tamilcinema #Cinemaupdate #cinenews #CinemaTrending #Kollywood