மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அண்மையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு. கண்டா வர சொல்லுங்க என தொடங்கும் இந்த பாடலை நாட்டுப்புற பாடகி கிடக்குழி மாரியம்மாள் பாடியுள்ளார். மேலும் இதில் பாடியதோடு இசையிலும் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
பாடல் முழுவதும் இருட்டு, தீப்பொறி கட்டையில் வரையும் தனுஷின் முகம் என்று பாடலில் வித்தியாசம் காட்டியிருந்தார் மாரிசெல்வராஜ். புதுவிதமான கற்பனைகளில் வெளியான கண்டா வர சொல்லுங்க பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருந்தது. இவ்விரு பாடல்களுக்கும் கிடைத்த வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கர்ணன் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளநிலையில் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “கர்ணன் டீசர் விரைவில்” என குறிப்பிட்டுள்ளார். இதனையறிந்த ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
#karnan #mariselvaraj #dhanush #tamilcinema #tamilthisai #karnanmovie tamilmovie #thanu