மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கல்லூரி பேராசிரியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தணடனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் கண்ணன் மோகனாம்பாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளனர். 40 வயதாகும் கண்ணன் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வசதியான குடும்பத்தில் பிறந்த மோகனாம்பாள் வசதி குறைவான கல்லூரி பேராசிரியர் கண்ணனை திருமண செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆனா சில மாதங்களுக்கு பிறகு வசதி குறைபாட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த மோகனாம்பாள் தனது கணவரை உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்று தினமும் வாக்குவாதம் நடந்துவந்துள்ளது.
அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இதே போல் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. பின்னர் இந்த வாக்குவாதம் முற்றிப்போக இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அதனையடுத்து ஆத்திரம் அடைந்த கணவர் கண்ணன் வீட்டில் இருந்த அம்மி கல்லை கொண்டு மனைவி மோகனாம்பாளை தாக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு கண்ணன் அவர் மனைவியின் கழுத்தை கத்தியை கொண்டு அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக திருமங்கலம் காவல்துறையினர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்தது வந்த இந்த வழக்கின் விசாரணையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் பேராசிரியர் கண்ணன் குற்றம் செய்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்தது அவருக்கு தூக் கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.