நடிகை கஸ்தூரி 90 களில் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோவிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.
அதனையடுத்து அவரின் துறுதுறு நடிப்பு பெரிது பேசப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானார். ரசிகர்களின் அன்பை பெற்ற கஸ்தூரி நடிப்பை தாண்டி பல சமூக கருத்துக்களையும் பேச தொடங்கினர். பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளில் ஆதரவாக குரல் கொடுப்பது, அரசியல் விமர்சகர் என்று பல முகங்கள் கொண்டவராக தற்போது திகழ்ந்து வருகிறார்.
எல்லா விஷயங்களுக்கும் குரல் கொடுக்கும் கஸ்தூரி தனது குடும்பம் தொடர்பான எந்த தகவல்களையும் இதுவரை வெளியில் பகிர்ந்ததில்லை. ஆனால் தற்போது தனது மகளின் புகைப்படத்தை முதல் முறையாக இணையத்தில் பகிருத்துள்ளார் பகிர்ந்துள்ளார்.
அதில்,” எனது குழந்தையின் 18 அடி முடியை மற்றோரு குழந்தை சிரிப்பதற்காக நன்கொடையாக கொடுத்திருக்கிறாள்.
அது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.