சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால், அவரின் சினிமா வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது.
அண்மையில் படத்தின் இசை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதனையடுத்து ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளி வர இருக்கிறது. மிக முக்கியமான இந்தப்படம் வெகு குறிகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளை மீட்க்கத்தான். திரையுலகம் முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவிற்கு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் விழா கோலம் பூனா வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகு பிரயத்தனப்பட்டு உயிரை பணயம் வைத்து நடித்து முடித்து தொழில்நுட்ப வேலைகள் டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சி அல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதே சமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்கவேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம்.ஆனால், திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.
திருவிழா நாட்களில் எப்போதும் பெரிய படங்கள் வெளியாகும்போது மக்கள் பயமின்றி வரத்தொடங்குவார்கள். என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும் உங்களை மகிழ்விக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
#master #mastervijay #eswaran #Tamilthisai #silambarasan #simbu