இந்தியாவில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பாக திரைத்துறையினரை அங்கீகரிக்கும் விதமாக தேசிய திரைப்பட விருதுகள் வழங்குவது வழக்கம். அந்தவகையில் தற்போது 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இவருக்கு இந்த விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். இதனையடுத்து திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களை நடிகர் தனுஷுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருது வெல்ல வேண்டும் என்பது கனவு. இரண்டு விருது வென்றது என்பது ஒரு வகையான ஆசீர்வாதமே. இவ்வளவு தூரம் பயணித்து வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன், மஞ்சு வாரியார், தயாரிப்பாளர் தாணு, ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துள்ளார்.
#dhanush #Asuran #vettrimaran #tamilthisai #tamilcinema #cinema #cineupdate #kollywood #cinemas #NationlAward2019 #TamilThisai