தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா தற்போது தமிழில் ‘ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் சரவணன் இயக்கிவருகிறார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.
இந்நிலையிதான் ஏ ஆர் முருகதாஸ் கதையில் நடிகை த்ரிஷாவை வைத்து ‘ராங்கி’ படத்தை உருவாக்கி வருகிறார் சரவணன். இப்படத்தினை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்துவருகிறது. இதனை தொடர்ந்து ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
‘ராங்கி’ படத்தின் “பனித்துளி” பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார், அதனை பாடகி சின்மயி இசையமைப்பாளர் சத்யா இயைசையில் பாடியுள்ளார். பின்னர் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார்.
அதனையடுத்து “பனித்துளி” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இதயனையடுத்து ராங்கி பட நாயகி த்ரிஷா பனித்துளி பாடலை வெளியிட்டதற்க்காக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.