தமிழ் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் “ரகுல் ப்ரீத்தி சிங்”. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா நெருக்கடி காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கொரோன பரவல் குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ரகுல் ப்ரீத்தி சிங் சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி இருந்தார். பின்னர் படப்பிடிப்புக்கு செல்வதற்காக தயாராக இருந்தநிலையில் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். அதில் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனை டுவிட்டர் வாயிலாக தெரிவித்த அவர் அதில் ” எனக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், தற்போது நன்றாக இருக்கிறேன், நான் ஓய்வு எடுத்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன், என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அனைவருக்கும் நன்றி” என தனது ட்விட்டரின் வாயிலாக இத்தகவலை பகிர்ந்துள்ளார்.