சினிமா

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் “ரகுல் ப்ரீத்தி சிங்”. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா  நெருக்கடி காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கொரோன பரவல் குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ரகுல் ப்ரீத்தி சிங்  சில தினங்களுக்கு முன்பு  குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி இருந்தார். பின்னர் படப்பிடிப்புக்கு செல்வதற்காக தயாராக இருந்தநிலையில் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். அதில்  அவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை டுவிட்டர் வாயிலாக தெரிவித்த அவர் அதில் ” எனக்கு கொரோன தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், தற்போது நன்றாக இருக்கிறேன், நான் ஓய்வு எடுத்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன், என்னை சந்தித்த அனைவரும்  கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அனைவருக்கும் நன்றி” என தனது ட்விட்டரின் வாயிலாக இத்தகவலை  பகிர்ந்துள்ளார்.

ALSO READ  தணிக்கை செய்யப்பட்ட "கர்ணன்" திரைப்படம் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பழங்கள் விற்பனையில் மும்முரமாக செயல்படும் தெலுங்கு நடிகர் :

Shobika

“சிலுக்கருப்பட்டி போல இது ஒரு அச்சுவெல்லம்” பாராட்டிய தள்ளிய சேரன் !

News Editor

‘மாமனிதன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு ! 

News Editor