சென்னை:-
நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் பரவியது.
அதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் அவரது, மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது, அதில் உண்மையில்லை என்றும் இதுபோன்ற நேரங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் மற்றொரு பாலிவுட் பிரபலமான அனுபம் கேர் குடும்பத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.