பெல்காம்:-
கர்நாடகத்தில் உள்ள புகைப்படக் கலைஞர் ஒருவர் தன் புகைப்படக்கலையின் மீதான அதீத ஆர்வம் காரணமாக தனது வீட்டை கேமரா வடிவத்தில் கட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ஹோங்கல் (49) (Ravi Hongal). சிறுவயது முதலே ரவி ஹோங்கலுக்கு புகைப்படக் கலையின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. பென்டேக்ஸ் (Pentax) கேமராவில் தனது புகைப்பட வாழ்க்கையை தொடங்கிய ரவி தற்போது சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை வைத்துள்ளார்.
இந்நிலையில் ரவி 71 லட்ச ரூபாய் மதிப்பில் மூன்று மாடி வீட்டை கட்டியுள்ளார். இதில் லென்ஸ், ஃப்ளாஷ், ஷோ ரீல், வ்யூஃபைண்டர் மற்றும் மெமரி கார்டு என கேமராவில் இருக்கும் அனைத்தையும் வைத்து தத்ரூபமாக பிரம்மாண்ட கேமரா போன்று தனது வீட்டை வடிவமைத்துள்ளார்.
இதில், மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தனது மூன்று மகன்களுக்கும் கெனான் (Canon), நிக்கான் (Nikon), எப்சன் (Epson) என்று பெயரிட்டுள்ளார்.