தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மும்பை :
பிரபல பாலிவுட் நடன இயக்குனர் ரெமோ டிசோசாவுக்கு இன்று பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டது.அதனையடுத்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரெமோவின் மனைவி லிசெல் டிசோசா இதனை உறுதிசெய்துள்ளார்.அடுத்த 24 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.அவருக்கு இருதயத்தில் அடைப்பு உள்ளது மருத்துவர்கள் ஆஞ்சியோகிராபி செய்துள்ளனர். அவர் ICU-வில் உள்ளார். தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது என அவரது மனைவி லிசெல் டிசோசா கூறியுள்ளார்.
ரெமோவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது.இருப்பினும் அவர் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.