ரஷியாவில் ஒரு இளம் பெண் சூட்கேசை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
வளர்ந்து வரும் காலகட்டத்தில் வித்தியாசமான திருமண முறைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ‘தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது, பொம்மையை திருமணம் செய்து கொள்வது, பெண்ணும் பெண்ணும் அல்லது ஆணும் ஆணும்’ திருமணம் செய்து கொள்வது இதுபோன்ற வித்தியாசமான திருமணங்களைப் பற்றி தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் தற்போது ரஷ்யாவில் நடந்திருக்கும் திருமணம் தான் இதற்கெல்லாம் உச்சம் ஒரு பெண் சூட்கேசை திருமணம் கொண்டுள்ளார். சிறுவயதில் இருந்தே பொருட்களின் மீது தனக்கு ஈர்ப்பு உண்டு என்று கூறும் இளம் பெண் சூட்கேசை காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய திருமணம் குறித்து பேசிய அந்த பெண் “எனக்கு ஒரு ஆண் மீது விருப்பம் இருந்தது. ஆனால் தற்போது சூட்கேஸ் மீது காதல் வந்துள்ளது, ஆகையால் தான் அதனை நான் திருமணம் செய்து கொண்டேன் மனிதர்களை விட பொருட்களுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தன்னுடைய கணவனான சூட்கேசை கடந்த 2015 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பார்த்தேன், ஒரு போட்டோ ஷூட்டிற்காக கடையில் அந்த சூட்கேசை வாங்கினேன்.
பின்பு அதை முதல்முறையாக பார்க்கும்போது காதலில் விழுந்து விட்டேன், எனது கணவர் பெயர் ஜிடியான் நான் அவருடன் பேசுவேன், அவர் பேசுவதை நான் கேட்பேன் எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் நிகழும், அவர் வெறும் துணை மட்டுமல்ல, கணவர் நல்ல நண்பன். ஆனால் மக்கள் பலர் என்னை புரிந்து கொள்ளவில்லை நான் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் கூறுகிறார்கள்.
மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்குப் புரியாத ஒன்றை வைத்து மற்றவர்களை தீர்மானிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.