விஜய் குமார் ” உறியடி” படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு இயக்குநர்கவும் நடிகராகவும் அறிமுகமானவர். அப்படத்தில் அவர் இயக்கத்தையும் நடிப்பையும் பார்த்த மக்கள் அவரை வெகுவாக பாராட்டி புகழ்ந்து வந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘உறியடி 2’ படமும் மக்கள் மத்தயில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நடிகராக விஜய் குமார் நடிக்கும் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரீல் குட் பிலிம்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த இயக்குனர் உறியடி படத்தின் இரு பாகங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்க்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாகவும், மற்ற நடிகை நடிகைகளை தேர்வு செய்வதிலும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் படக்குழு நடத்திவருவதாகவும் அதகிகரப்பூர்வமான அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது.