நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான மூடநம்பிக்கை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சமூக ரீதியான கருத்துக்களை தனது காமெடி மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.
இந்நிலையில் நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து அவருக்கு எக்மோர் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியாளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இவரின் இறப்பிற்கு திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன்” என குறிப்பிட்டுள்ளார்.
#Corona #Coronavaccine #TamilThisai #Tamilcinema #Cinema #Cinemanews #Tamilnadu #Vivek #Kollywood #RIPviveksir #vairamuthu