நயன்தாராவை ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேட்டதற்கு யாரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவருக்கும் மலர்ந்தது காதல் எனப்படுகிறது.
சுமார் 6 வருடங்களாக ஒன்றை சுற்றிவரும் வரும் இவர்கள், எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒருவர், ‘ஏன் நீங்கள் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை? ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், “திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.