சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக தைரியமான பெண் என்று அறியப்பட்ட சித்ரா, தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
அதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டார் தொடரில் சித்ராவிற்கு பதிலாக வேறு யார் நடிக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் தற்போது சில தொடர்களில் நடித்துவரும் ஜனனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ மூலம் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் பாண்டியன் ஸ்டார் சீரியலில் சித்ராவின் ( முல்லை) கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால் உங்க கருத்து என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்,
அதற்கு பதிலளித்த ஜனனி “முல்லை கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் அதன் ரசிகைய முல்லை கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது, முல்லை என்ற கதாபாத்திரத்தை சித்ராவை தவிர வேற யாரையும் நினைத்து பார்க்கமுடியாது , ஏன் முல்லை கதாபாத்திரத்தில் என்னையும் கூட நினைத்து பார்க்க முடியவில்லை, சித்ரா முல்லையாக நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்” என்று ஜனனி கூறினார்.