தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் தற்போது இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எப்.ஐ.ஆர். படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
இதனையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் ‘மோகன் தாஸ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார். இவர், ‘களவு’ படத்தின் இயக்குநர் ஆவார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இப்படத்திற்கு சண்டைக்காட்சி இயக்குநராக அன்பறிவு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டையர்களான இவர்கள், ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’ உள்ளிட்ட பட வெற்றிப்படங்களில் சண்டைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ளனர். இவர்கள், கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்திற்காக சிறந்த சண்டைக்காட்சி இயக்குநருக்கான தேசிய விருதினை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோகன்தாஸ் படபிடடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்து விரைவில் திரைக்கு கொண்டுவரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.