சீரியல் நடிகை சித்ரா (29) இவர் திருவான்மியூரில் வசித்துவருகிறார், அவரின் தந்தை ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் தொலைக்காட்சில் தொகுப்பாளராக இருந்தார். அதன் காரணமா அவருக்கு சின்னத்திரையில் முகம் காட்ட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வாய்ப்பினை பயன்படுத்தி சின்னத்திரை பார்வையாளர்களை தன் கைவசம் கொண்டுவந்தார்.
ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற பிரபல தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கான தனி இடத்தை பிடித்தார். காலப்போக்கில் இல்லதரசிகளின் இதய அரசியாக மாறிப்போனார், அதன் பின் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டார் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் அவரின் கதாபாத்திரம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.
சித்ராவிற்கு சில தினங்களுக்கு முன்புதான் ஹேமநாத் என்பவருடன் நிச்சியதார்தம் நடைபெற்றது. அடுத்த மதம் ஜனவரியில் இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்த. நிலையில்தான் நேற்று பூந்தமல்லியில் பாண்டியன் ஸ்டார் சீரியலில் படப்பிடிப்பினை முடித்துவிட்டு தன்னுடைய வருங்கால கணவரான ஹேமநாத்துடன் நஸ்ரத் பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஒன்றாக தங்கியிருந்தார் . இந்த நிலையில் நேற்று இரவு அவர் தங்கி இருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் இருந்த சித்ராவின் உடலை மீட்டனர். அப்போது அவர் முகத்தில் இருந்த காயத்தை கவனித்த காவல் துறையினர், சந்தேகத்தின் பெயரில் அவருடன் அறையில் தங்கி இருந்த ஹேமநாத்திடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது “நான் குளிக்க வேண்டும் கொஞ்சம் வெளியில் செல்லுங்கள் என்று கூறினார் அதனால் நான் வெளியில் சென்றுவிட்டேன், பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் விடுதி நிர்வாகத்திடம் சென்று அறையின் மற்றோரு சாவியை வாங்கி வந்து அறையை திறந்து பார்த்தேன். அப்போதுதான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து உள்ளது என்று எனக்கு தெரியவந்தாக” ஹேமநாத் போலீசாரிடம் கூறினார்.
பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று கோணத்தில் தங்களுடைய முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
#mullai #vjchitra #pandiyanstore #serialactor #tamilthisai #chitra #pandiyanstoremullai