தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து வந்தவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார்.கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் இறந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜ், கடந்த அக்டோபர் மாதம், ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்தநிலையில் மேக்னா ராஜ் மற்றும் அவரது குழந்தை, மேக்னா ராஜின் பெற்றோர் ஆகியோருக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது.இந்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மேக்னா ராஜ், “நான் எனது பெற்றோர் எனது குழந்தை உள்ளிட்ட அனைவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறோம்.ஒரு வாரத்திற்கு முன்பு எங்களை வந்து சந்தித்து சென்றவர்களுக்கும் இந்த தகவலை முறையாக தெரியப்படுத்தி விட்டோம்.
எனது ரசிகர்கள் மற்றும் எனது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ரசிகர்களும் கொரோனாவை அலட்சியமாக நினைக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். ஜூனியர் சிரஞ்சீவி சார்ஜா நன்றாக இருக்கிறான்.ஒருநொடி கூட என்னைவிட்டு விலகாமல் ஒட்டிக்கொள்கிறான்.கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் நாங்கள் குடும்பத்துடன் போராடி வெற்றி பெறுவோம்” என கூறியுள்ளார்.