சினிமா

பாடலாசிரியர் சினேகன் காரில் அடிபட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுக்கோட்டை :

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

ALSO READ  மகனுக்காக மரத்தில் லம்போர்கினி காரை உருவாக்கிய தந்தை…!

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அருண் பாண்டி படுகாயமடைந்தார். 

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருண் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கார் ஓட்டிச் சென்ற சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூதாட்ட புகாரில் நடிகர் ஷாம் திடீர் கைது…

naveen santhakumar

‘காசேதான் கடவுளடா’ ரீமேக்: சிவா, யோகிபாபுவுடன் இணைந்த சிவாங்கி

naveen santhakumar

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !

News Editor