தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.
மதரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டத்தை அமல்படுத்த குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மதரீதியாக பாதிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.