தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொல்கத்தாவில் ஓடும் மெட்ரோவில் இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் propose செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் காதலிப்பவர்களும், புதிதாக காதலை தொடங்குபவர்களும் தங்களது அன்பை துணையிடம் வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில் காதலர் தினத்தில் கொல்கத்தாவில் சால்ட் லேக் நகர் முதல் சால்ட் லேக் ஸ்டேடியம் வரை புதிய மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதனால் மெட்ரோவில் பயணித்த அனைவருக்கும் ரோஜாப்பூ வழங்கப்பட்டது. அதில் தனது தோழியுடன் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரென ஓடும் மெட்ரோவில் தனது காதலை அப்பெண்ணிடம் வெளிப்படுத்தினார்.
அப்பெண்ணும் மகிழ்ச்சியடைந்து அக்காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இந்த சம்பவத்தை கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட செம வைரல் ஆனது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.