கேரளாவில் அரசு சார்பில் விற்கப்படும் லாட்டரி சீட்டில் ஆதிவாசி காலனியை தொழிலாளி ரூபாய் 12 கோடி பரிசு கிடைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த கூத்தம்பரம்பி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வயநாட்டில் உள்ள ஒரு லாட்டரி வியாபாரியிடம் கேரள அரசின் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக ராஜன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூபாய் 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.
ரூபாய் 12 கோடி பரிசு கிடைத்தது குறித்து ராஜன் கூறுகையில் அடிக்கடி தான் லாட்டரி சீட்டு வாங்குவதில்லை என்றும், கிடைத்த பணத்தை கொண்டு தனது மூன்று குழந்தைகளின் எதிர்கால செலவுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த கடலை வியாபாரி ஒருவருக்கு ரூபாய் 60 லட்சம் லாட்டரி சீட்டில் பரிசாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.