துருக்கி நாட்டில் எச்சில் துப்பிய பீட்சாவை டெலிவரி செய்த நபருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் உள்ள மத்திய அனதொலி பகுதியைச் சேர்ந்த பிராக்ஸ் என்பவர் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இவர் சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று வழக்கம் போல வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டுக்கு பீட்சா டெலிவரி சென்று கொடுத்துள்ளார்.
ஆனால் அவரது நடவடிக்கை வித்தியாசமாக இருந்ததை கண்ட வாடிக்கையாளர் அப்பார்ட்மெண்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் பிராக்ஸ் அதில் எச்சில் துப்பி பீட்சாவை டெலிவரி செய்வது பதிவாகியிருந்தது. இதனையடுத்து காவல்துறையில் அந்த வாடிக்கையாளர் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட பிராக்ஸ்க்கு இஸ்தான்புல் நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.