ஹைதராபாத் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி உள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் ஷில்பா ராவ் தம்பதிகளின் மகன் ரித்தி அங்குள்ள இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தனது உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் மூலமாக 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டியுள்ளார் இதன்மூலம் 650 ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ அரிசியில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஒரு கிலோ உப்பு இரண்டு பார் சோப்புகள் அடங்கிய தொகுப்பை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சிறுமி ரித்தி கூறுகையில்
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை மக்கள் பலரும் உணவிற்கு சிரமப்படுவதை ஒரு வீடியோ ஒன்றின் வாயிலாக கண்டேன் இது எடுத்து அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று என்னை சேர்ந்தவர்களிடம் தெரிந்தவர்களிடம் எல்லாம் உதவி கேட்டேன் இதன்மூலம் அவர்களுக்கு உதவி உள்ளேன் என்றார்.
இவரின் இந்த ப்ராஜெக்ட்டுக்கு “Care Ona” என்று பெயரிட்டுள்ளார்.
இதுகுறித்து கூறிய சிறுமியின் தாயார் ஷில்பா ராவ்:-
முதலில் நாங்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 தொகுப்புகளை செர்லிங்கம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு ஹைதராபாத் போலீசாரின் உதவியுடன் வழங்கினோம்.
இதுகுறித்து எங்கள் மகள் விசாரித்தால் அப்பொழுது இன்னும் நிறைய மக்கள் உணவு கிடைக்காமல் உள்ளனர் என்று தெரிவித்தோம். இதையடுத்து மேலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால். அதன் பின்னர் கிரவுட்ஃபண்டிங் (Crowd Funding) மூலமாக மேலும் பணம் கிடைத்தது. இதன்மூலம் NGOகளுடன் இணைந்து பொது மக்களுக்கு உதவ உள்ளோம் என்றார்.
இதனிடையே சிறுமியின் இந்த முயற்சியை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.