மும்பை:-
நடிகர் இர்பான் கான் மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) காலமானார்.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்பான் கான் (54) . பெருங்குடல் நோய் தொற்று (Colon Infection) காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் தனக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்திருந்தார்.
இர்பான் கானுக்கு சுதாபா (Sutapa) என்ற மனைவியும் பபில் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த வாரம் இர்பான் கானின் தாயார் சயீதா பேகம் (95) ஜெய்ப்பூரில் காலமானார். இர்பான் கானின் தாயார் டோங்கின் நவாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியாமல் தவித்தார். இந்நிலையில் இர்பான் கானின் மறைவு செய்தி திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.