இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ஆந்திராவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் மே 5 ஆம் தேதி 12 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வெளிய வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.