விஜயவாடா:-
72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை ரோடு ரோலர் (RoadRoller) மூலம் ஆந்திர அரசு அழித்துள்ளது.
ஆந்திராவில் தற்பொழுது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அங்கே பயன்படுத்திக்கொண்டு பக்கத்து மாநிலங்களிலிருந்து மதுபானங்கள் கடத்தி வரப்படுகிறது. அதன்படி தெலுங்கானாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 14,000 மேற்பட்ட மதுபான பாட்டில்கள் கைப்பற்றிய போலீசார் மசூலிப்பட்டினம் (Machilipatnam) நகரில் ரோடுரோலர் மூலமாக ஏற்றி அழித்தனர். இந்த பாட்டில்களை மொத்தமாக 3207 லிட்டர் மது பானம் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவிந்திரபாபு கூறுகையில்:-
ஆந்திரா தெலுங்கானா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் சிறப்பு அமலாக்க பிரிவு (மது மற்றும் மணல்) போலீசார் (Special Enforcement Bureau) மேற்கொண்ட தீவிர சோதனைகளில் இந்த மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 312 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மது, மணல் கடத்தல் மற்றும் பறிமுதல் 300 முதல் 400 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.