சென்னை
சென்னை துறைமுகம் அருகே உள்ள ‘டாப்ளர் வெதர் ரேடார் 15’ என்ற கருவி தான் 15 ஆண்டுகளாக, மழை குறித்த முன் தகவல்களை தந்து கொண்டிருந்தது. இந்த கருவி ஏற்கனவே பலமுறை பழுதாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பழுதாகி உள்ள தகவல் சமீபத்தில் தெரிய வந்தது. எனவே தமிழ் நாட்டின் வானிலை நிலவரம் தெரிந்து கொள்ள இயலவில்லை.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை ரேடார் பழுதடைந்தால் வானிலை ஆய்வு மையம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ரேடார்கள் உடைந்துள்ளதை சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் (ஆர்எம்சி) ஒப்புக்கொண்டனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் வட தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், நவம்பர் 11-12 க்குள் வட கடலோர தமிழகத்தில் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் டாப்ளர் வெதர் ரேடார் 15 கருவி பழுது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கவனத்திற்கு மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கொண்டு சென்றார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ‘ரேடார்’ பழுதடைந்துள்ள நிலையில், அதை சீர் செய்து விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலங்களில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்துக்கு அதிக மழை கிடைத்து வருகிறது. இருப்பினும் காலநிலை மாற்றம் காரணமாக புயல்களின் தன்மை, மழைப் பொழிவு குறித்த எதிர்பார்ப்பு போன்றவற்றை கணிப்பது கடினமாகி வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்காலிகமாக ஸ்ரீஹரிகோட்டா மற்றும் காரைக்காலில் உள்ள ரேடார்கள் உதவியுடன் மழை குறித்த முன்னறிவுப்புகள் எந்தவித தாமதமும், இடையூறும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.