ரஜினியின் அரசியல் இருந்து பின்வாங்கியதால் விழுப்புரம் ராஜ்குமார் என்ற ரஜினி ரசிகர் அதிரிச்சியில் மரணமடைந்தார்.
டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ரஜினி “கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுப்பட போவதில்லை” என்று மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டுருந்தார். அதனை தொடர்ந்து ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் அருகே பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தீவிர ரஜினி ரசிகர், இவர் ரஜினி அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். அதன் பின்னர் நேற்று இவர் சமூக வலைத்தளத்தில் ரஜினியின் முடிவைக் கேட்டு தனது இறுதி கருத்து என பதிவிட்டு விட்டு அதிர்ச்சியில் இறந்து விட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் இது தங்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினார்கள். உயிரிழந்த ராஜ்குமாருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.