தமிழகம்

ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியதால்…அதிர்ச்சியில் ரசிகர் மரணம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஜினியின் அரசியல் இருந்து பின்வாங்கியதால்  விழுப்புரம் ராஜ்குமார் என்ற ரஜினி ரசிகர் அதிரிச்சியில் மரணமடைந்தார்.

டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ரஜினி “கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுப்பட போவதில்லை” என்று மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டுருந்தார். அதனை தொடர்ந்து ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்நிலையில் விழுப்புரம் அருகே பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தீவிர ரஜினி ரசிகர், இவர் ரஜினி அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். அதன் பின்னர் நேற்று இவர் சமூக வலைத்தளத்தில் ரஜினியின் முடிவைக் கேட்டு தனது இறுதி கருத்து என பதிவிட்டு விட்டு அதிர்ச்சியில் இறந்து விட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  

ALSO READ  சீரம் நிறுவன தடுப்பூசியை திரும்ப பெற்று கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா வலிவுறுத்தல்..!


மேலும் இது தங்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினார்கள். உயிரிழந்த ராஜ்குமாருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்…! 

naveen santhakumar

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

naveen santhakumar

மனைவின் கழுத்தை அறுத்துக் கொன்ற பேராசிரியருக்கு மரண தண்டனை விதித்த உயர்நீதிமன்றம் !

News Editor