பெங்களூரு:-
இரண்டு வாரங்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபின் வீடு திரும்பிய பெங்களூருவில் மருத்துவருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கைதட்டி அவரது சேவையை பாராட்டி வரவேற்பளித்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த பெண் மருத்துவர் டாக்டர் விஜயஸ்ரீ (Dr. VijayaShree) இவர் MS ராமையா நினைவு (MS Ramaiah Memorial Hospital) மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்புக்கு திரும்பி வந்த பெண் மருத்துவர் விஜயஸ்ரீ-க்கு அப்பகுதியில் உள்ளவர்கள் அவரது சேவையை பாராட்டி கைதட்டி அவருக்கு வரவேற்பளித்தனர்.
இதனை பெங்களூரு மேயர் கௌதம் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்ட விஜயஸ்ரீ-ன் கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வழிந்தோடியது.
இவ்வாறு கைதட்டி வரவேற்பளிக்கும் இதே மக்கள்தான் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உயிரிழந்தால், அவரது இறுதி சடங்குகளை கூட செய்ய விடாமல் தடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.