நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் சிறிய தூர பயணத்திற்கான எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டம் குறித்த தகவலை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021 கீழ் ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ எலக்ட்ரிக் பைக்குகளை டாக்ஸி-யாகப் பயன்படுத்தப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது என்றும் நிறுவனங்களால் பதிவு செய்யப்படும் ஈ-பைக்குகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் ஈ-பைக் டாக்ஸி நிறுவனங்கள் கட்டாயம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என குறிப்பிடபப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் நகரத்து வாழ்க்கை முறை எளிதாகும், பல வேலைவாய்ப்புகளையும், தொழில்களையும் உருவாக்க முடியும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா குறிப்பிட்டு உள்ளார்.
இதுபோன்ற திட்டத்தினை தமிழகத்திலும் விரைவில் எதிர்பார்க்கலாம்…