தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பல்வேறு உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த 46 மற்றும் 66 வயதுடைய இரண்டு ஆண்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற கொரோனா உருமாற்றங்களோடு ஒப்பிடுகையில் ஓமைக்ரான் 5 மடங்கு வேகத்தில் பரவ கூடியது.
மேற்கண்ட இருவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 30 நாடுகளில் 400 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. ஓமைக்ரான் பரவலுக்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 8000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம் மக்கள் ஓமைக்ரான் தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.