மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 33 வது நாளை எட்டியுள்ளது
விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில்தான் முடிந்தன. அதன் பிறகு தற்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், நாளை (29/12/2020) அன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனப் போராடும் விவசாய அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தேதியினை மாற்றியுள்ளது மத்திய அரசு. அதன்படி நாளை மறுநாள் (30/12/2020) அன்று பேச்சு வார்த்தைக்கு வருமாறு விவசாய அமைப்பிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது மத்தியஅரசு