மதுரை:
மதுரையில் சேதமடைந்த ஓடுகளை ஓட்டையின்றி அடுக்கி குறைந்த செலவில் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு நகர மற்றும் கிராம பகுதிகளில் ஓட்டு வீடுகளே அதிகம் காணப்பட்டன.இந்த வகையான ஓடுகள் மானாமதுரையில் அப்போது ஏராளமான கம்பெனிகளில் தயாரிக்கப்பட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் விற்கப்பட்டன.காலப்போக்கில் கிராமங்களில் கூட எங்கு பார்த்தாலும் கான்கிரீட் வீடுகளே உள்ளன.
ஒரு சில இடங்களில் மட்டுமே ஓட்டு வீடுகள் காணப்படுகின்றன.மேலும் வீடுகளின் முகப்புகளில் அலங்காரத்திற்காகவும் டிசைன் ஓடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஓட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மானாமதுரை பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் ஒரு சில ஓட்டு கம்பெனிகளில் ஓடுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அப்போது சேதமாகும் ஓடுகள் மற்றும் நீண்ட நாட்கள் விற்பனையாகாத ஓடுகள் ஆகியவற்றை கொண்டு மானாமதுரை பகுதியில் சிலர் தங்களது கம்பெனிகளை சுற்றியும்,வீடுகளை சுற்றியும் அழகாக குறைந்த செலவில் சுற்றுச்சுவர் அமைத்து உள்ளனர்.