ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இனி பயனர்களின் கார்டு விவரங்களை சேமிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஒழுங்குமுறைகளின் படி இனி எந்தவொரு நிறுவனமும், கார்டு நெட்வொர்க்கும் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை சேமிக்க கூடாது என்று ஜனவரி 1, 2020 ஆண்டிலே அறிவித்திருந்தது.
அதன்படி ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டு முதல் இந்த ஒழுங்குமுறையானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் கூகுள் பே செயலியில் தற்போது சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு அப்டேட் ஆகவுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களது கார்டு விவரங்களை சேமிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
அதாவது உங்களின் கார்டு எண், முடிவடையும் தேதி போன்ற முன்னரே அளிக்கப்பட்ட விபரங்களை கொண்டு கூகுள் பே செயலியில்பணப்பரிமாற்றம் செய்ய இயலாது.
எனவே இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகும் உங்களின் கார்டு விவரங்கள் கூகுள் பே செயலியில் ரீ-என்டர் செய்ய வேண்டும். அதாவது 2021 ஆண்டு தொடங்கியதும் அந்த கார்டு விவரங்களை ஒரு முறையாவது பதிவிட்டு ஏதாவது பரிமாற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உங்களின் கார்டு விவரங்கள் கூகுள் பே செயலியில் தோன்றாது.