தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கவோ, கரை பகுதிக்குச் சென்று பார்வையிடவும் செல்பி எடுக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன.
குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால்ள ஆற்றில் உள்ள கல் மண்டபங்கள், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்து செல்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கரை பகுதிக்குச் சென்று பார்வையிடவும் செல்பி எடுக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், மதுரை வைகை ஆற்றில் 13 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மூன்று தரை பாலங்கள் மூழ்கியுள்ள நிலையில், வைகை கரையோரமுள்ள அணுகு சாலை மற்றும் மீனாட்சி கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் கோரிப்பாளையம், செல்லூர், சிம்மக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.