இந்தியா

ரயில் தடம் புரண்டு கோர விபத்து… உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு!

Train accident
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் நேற்று மாலை 5 மணி அளவில் மேற்கு வங்கத்தின் தோமோஹானி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பேட்டிகள் தடம் புரண்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சேதமடைந்த பெட்டிகளில் இருந்து மக்களை மீட்டனர்.

நேற்றைய நிலவரப்படி இந்த கோரவிபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மைனகுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் ஜல்பாய்குரி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
ALSO READ  Лучшие Онлайн Казино 2023 ᐈ Списки Бонусов Отзыв
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை – வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

News Editor

இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி

naveen santhakumar

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

News Editor