தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் நேற்று மாலை 5 மணி அளவில் மேற்கு வங்கத்தின் தோமோஹானி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பேட்டிகள் தடம் புரண்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சேதமடைந்த பெட்டிகளில் இருந்து மக்களை மீட்டனர்.
நேற்றைய நிலவரப்படி இந்த கோரவிபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மைனகுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் ஜல்பாய்குரி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.