இந்தியா

கார் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தந்தையின் கார் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ttn

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்பி நகர் மன்சூர்பாத் பகுதியை சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது காரை இயக்கியுள்ளார்.

அப்போது அவரது 4வயது மகன் சாத்விக், தந்தையின் பின்னாடியே ஓடி வர அதை, லக்ஷ்மன் கவனிக்கவில்லை. அவர் காருக்குள் ஏறி காரை இயக்க முற்பட்ட போது, சிறுவன் சாத்விக், காருக்கு முன்பு ஓடி வந்துள்ளார்.

ALSO READ  Pin Up Apostas Em Esportes On The Internet Brasil Pin Up Be

இதை கவனிக்காமல் தந்தை லக்ஷ்மன் காரை இயக்க தொடங்கியபோது , எதிர்பாராதவிதமாக காரின் முன் பகுதியில் உள்ள சக்கரத்தில் அவரது மகன் சாத்விக் சிக்கியுள்ளார்.

பெரும் கூச்சலுடன் குழந்தை அழுகை சத்தத்தை கேட்டு பதறி வந்த அவரது தந்தை லக்ஷ்மன் உடனடியாக படுகாயமடைந்த சிறுவன் சாத்விக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ALSO READ  பிரபல பாடகி திடீர் மரணம்: பிரபலங்கள் இரங்கல்

இதில் படுகாயமடைந்த சிறுவனை தந்தை உடனே தூக்கி அவரது வீட்டிற்குள் கொண்டு செல்லும்சிசிடிவி காட்சிகள் வெளியாகி அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xBet ваш лучший выбор для ставок на спорт в Казахстан

Shobika

ட்விட்டர் இந்தியா மீது போக்ஸோ வழக்கு

News Editor

கொரோனா பாதித்தோருக்கு மருத்துவமனைகளில் 5 ஸ்டார் ரேஞ்சில் உணவு வழங்கும் கேரளா…..

naveen santhakumar