ஜெய்பீம் படத்திற்கு எதிராக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மற்றும் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத்தினர் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 5 கோடி நஷ்டஈடும் கேட்கப்பட்டது, அதனை சூர்யா கண்டுகொள்ளவேயில்லை.
எனினும், படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் படத்தில் இடம்பெற்றிருந்த கருத்துகள் குறித்த தனது வருத்தங்களை பதிவு செய்திருந்த போதிலும், தற்போது நடிகர் சூர்யா மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.