காரைக்கால் – இலங்கையின் யாழ்பாணம் (Jaffna) இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்தார்.
புதுச்சேரியில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
காரைக்கால்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்தும் அதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த தலைமை செயலர் தலைமையில் 2 செயலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. அவர்களது பரிந்துரையின் பேரில் கப்பல் போக்குவரத்து குறித்து விரைந்து முடிவு செய்யப்படும். இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவோடு செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில்:-
இந்த கப்பல் பயணத்தின் மூலம் 56 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள இலங்கையை 3 மணி நேரத்தில் அடையலாம் என்றும் இதற்கு கட்டணமாக 6500 முதல் 7000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும்
என்று கூறினார்.