பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால் அங்க கடுமையான கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைளைகளை எடுத்து வருகிறது அந்நாட்டு அரசு.
அதனையடுத்து பிரிட்டனில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தடை விதித்திருந்த நிலையில் அந்த தடையை மேலும் நீடித்த மத்திய அரசு ஜனவரி 7 ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6 முதல் விமான சேவை தொடங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8 முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் இந்தியா பிரிட்டன் இடையே வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும் எனவும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் தெரிவித்தார். மேலும், இந்த ஏற்பாடு ஜனவரி 23 வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.