தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜெய்பூர் :
லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய பிரதேச உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என மத்தியபிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,”இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது.
குற்றம் செய்தவர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். விருப்பத்துடன் மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்” என்றார்.
லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வருவது பற்றி பரிசீலிப்பதாக கர்நாடகா மற்றும் ஹரியானா மாநில அரசுகள் சமீபத்தில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.